தெற்காசிய உதைபந்தாட்டக் கிண்ண போட்டியில் மகாஜன வீராங்கனைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2021 (புதன்கிழமை)
எதிர்வரும் 11 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசியா உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் (SAFF U-19 Women's Championship 2021) பங்குபற்றவுள்ள இலங்கை 19 வயதுப் பெண்களுக்கான தேசிய அணியில் (23 வீராங்கனைகளைக் கொண்ட அணி) மகாஜனக் கல்லூரி வீராங்கனைகளான சி.தர்மிகா, உ.யோகிதா, கிரிசாந்தினி, ம.வலன்ரீனா ஆகிய நால்வர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த அணியின் பொறுப்பாசிரியராக கல்லூரியின் பெண்கள் உதைபந்தாட்ட அணியின் பொறுப்பாசிரியராக விளங்கும் செல்வி பத்மநிதி செல்லையா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணி இன்று 08.12.2021 பங்களாதேஷ் பயணமாகவுள்ளது.
போட்டிகள் டாக்காவில் உள்ள BSSS Mostafa Kamal Stadium இல் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: December 08, 2021 at 20:27
மகிழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.