யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது நாளை புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகி எதிர்வரும் திங்கட்கிழமை 14 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
கொவிட் – 19 பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக, 2021ஆம் ஆண்டில் நடைபெறாது பிற்போடப்பட்ட கடந்த வருடத்திற்கான திரைப்பட விழாவே இவ்வாண்டில் கட்டம் கட்டமாக நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுயாதீன சினிமாவினைக் கொண்டாடுதல் எனும் நோக்கத்துடன் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டுவருகின்றது. வருடந்தோறும் கொண்டாடப்படும் அவ் விழாவானது தற்போது அதன் ஏழாவது வருடமாக இடம்பெறுகின்றது.
2021ஆம் ஆண்டிற்கான முதலாம் கட்டத் திரையிடல்கள் கடந்த தை மாத இறுதியில் கண்டி வீதியிலுள்ள ஜேர்மன் கோத்தே கலாசார நிறுவனத்தின் அனுசரணையுடன் இயங்கும் பண்பாடுகளின் சந்திப்பு வெளியாகிய ‘கலத்தில்’ இடம்பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டத் திரையிடல்களும், நிகழ்வுகளுமே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளன. இறுதியாக, விழாவின் இறுதிக் காட்சியும் விருது வழங்கல் நிகழ்வும் எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்திலுள்ள றீகல் சினிமாவில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.