தீருவிலில் திட்டமிட்டபடி உள் மற்றும் வெளி விளையாட்டாரங்கங்கள் அமைக்கப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2016 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே திட்டமிட்டபடி 25 கோடி ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் வெளியக விளையாட்டு அரங்கம் நிறுவப்படும் எனத்தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் திரு மங்கள சமரவீர, வல்வை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றின் போதே வட மாகாணசபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் இதுபற்றி கேட்டபோது தெரிவித்திருந்தார்.
குறித்த பதில் அளிப்பில், 25 கோடி ரூபா நிதியினை மத்திய அரசாங்கத்திடம் பெற்றுத்தர தான் உதவிபுரிவேன் என்றும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்திருந்தார் என திரு சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற இந்த உயர் மட்ட கலந்துரையாடலில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் மகளீர் சிறுவர் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜியகலா மகேஸ்வரன், யாழ் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், பிரதி சுங்கப் பணிப்பாளர் மற்றும் பருத்தித்துறை பிரதேசசபைத் தலைவர் ஜெயசீலன், வல்வை நகரசபைத் தலைவர் திரு.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.