38 குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய நாயை 3 நாட்கள் காத்திருந்து காப்பாற்றிய நாய், ரோமியோ, ஜூலியட் என பெயரிடப்பட்டுள்ள
Posted Date: 10/12/2014
38 தடவைகள் ஈய குண்டுகளைக் (lead pellet gun) கொண்ட துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்காக போராடிய தனது தோழமையான நாயை 3 நாட்கள் அதனருகே காவலிருந்து பிறிதொரு நாய் காப்பாற்றிய நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் கிரேக்கத் தீவான ஸகின்தோஸில் (Greek island of Zakynthos) இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்டு சாக்கடை கால்வாயொன்றில் போடப்பட்டிருந்த 4 வயதான ஆண் நாயைக் கண்ட 2 வயதான பெண் நாய் அதனருகே 3 நாட்களாக எதுவித உணவும் உண்ணாது காவலிருந்ததுடன் அந்நாயை காப்பாற்ற அவ்வழியாக செல்வோரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக குரைத்துக் கொண்டிருந்துள்ளது.
இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஒருவர் அந்நாய்க்கு உதவ முன் வந்ததையடுத்து, அந்த இரண்டு நாய்களும் மீட்கப்பட்டு கிரேக்க மிருக வைத்தியசாலையொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அந்த வைத்தியசாலையின் மருத்துவர்கள் காயமடைந்த ஆண் நாய்க்கு பெரும் சிரமத்தின் மத்தியில் சிகிச்சையளித்து அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். அவையிரண்டும் தெரு நாய்கள் என நம்பப்படுகின்றன.
தற்போது ரோமியோ (Romeo), ஜூலியட் (Juliet) என அழைக்கப்படும் அந்நாய்கள் பிரித்தானியாவுக்கு கொண்டு வரப்பட்டு மேற்கு சசக்ஸிலுள்ள ஹோல்புறூக் (Holbrook Animal Rescue in Horsham, West Sussex) மிருக பராமரிப்பு நிலையத்தில் வாழ்கின்றன.
மேற்படி ஆண் நாயின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Reproduction of our any news item is allowed when used without any alterations to the contents and the source, Valvettithurai.org, is mentioned.