மழை மற்றும் இடியுடன் கூடிய மழை நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் காணப்படும்.
இன்று காலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது.
வடமாகாணம் , வடமத்திய மாகாணம், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 24 மணித்தியாலத்தில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்றும் இது 150 மில்லிமீற்றரை தாண்டியதாக அமையும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.