சக்திவளக்கழகப்போட்டியில் (energy-day-national-level-competition) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் உதயரூபன் லதுஷ்ஷோபன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி கொழும்பு அனுலாவித்தியாலயத்தில் நடைபெற்ற தரம் 6 - 9 பிரிவு மாணவர்களுக்கான தேசியமட்டப் போட்டியிலேயே முதலாம் லதுஷ்ஷோபன் இடத்தைப் பெற்றுள்ளார்.
மாணவன் உதயரூபன் லதுஷ்ஷோபன் முன்னர் வவுனியாவில் நடைபெற்ற மாகாணமட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தைப்பெற்றிருந்தார்.
இவர் யா/ கெருடாவில் இ த க பாடசாலை அதிபர் திரு. க.உதயரூபனின் மகனும் யா/சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் அதிபர் திரு .ஆ.சுப்பிரமணியத்தின் பேரனும் ஆவார் .
லதுஷ்ஷோபன் கடந்த வருடம் கழிவு வாழைத்தண்டிலிருந்து மின்சாரம் பெற்று மின் குமிழை ஒளிரச்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.