முன்னாள் ஹாட்லி கல்லூரி உப அதிபர் வல்லிபுரம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2022 (சனிக்கிழமை)
முன்னாள் ஹாட்லி கல்லூரி உப அதிபர் இராமலிங்கம் வல்லிபுரம் இன்று அதிகாலை காலமானார். இயவ்ருக்கு வயது 98.
வல்வை மருதடியைச் சேர்ந்த திரு இராமலிங்கம் வல்லிபுரம் அவர்கள் 80 களில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் உப அதிபரா ஆகவும், பின்னர் சில வருடங்கள் வல்வை நெடியகாடு திருச் சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபைத் தலைவராகவும் விளங்கியிருந்தார்.
திரு.வல்லிபுரம் அவர்கள் 80-90 இல் தொடர்ந்து கொண்டிருந்த உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து 90 இல் இடம்பெயர்ந்து சிங்கப்பூர் மற்றும் லண்டனில் வாழ்ந்து வந்தார்.
இவரின் ஒரு புதல்வர் திரு.ரமேசன், 80 களின் நடுப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 90 ஆம் ஆண்டு காங்கேசந்துறை இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் மரணம் அடைந்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: January 22, 2022 at 21:29
ஆழ்ந்த இரங்கல்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.