சந்நிதி கலாமன்ற இளைஞர்களால் முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2020 (சனிக்கிழமை)
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் இன்று மதியத்துடன் வருகின்ற 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட இடமாக பிரதேச சுகாதார பரிசோதகர் மற்றும் காவல்த்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஆச்சிரமத்தில் நாள்தோறும் பசியாறிவந்த சுமார் 50 க்கு மேற்பட்டவர்களின் உணவுத்தேவையை 14 நாட்களுக்கு வழங்கி அவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக கலாமன்றம் தொண்டைமனாறு செல்வச்சந்நிதி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக சந்நிதி கலாமண்ற இளைஞர்களால் ஆலய சுற்றாடலில் தங்கி இருக்கும் முதியவர்களுக்கான காலை உணவு மற்றும் தேனீர் சுகாதார நடைமுறை களை பின்பற்றி வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.