வல்வெட்டித்துறை மோதல் சம்பவம் - 5 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2018 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் மற்றைய ஐவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை வல்வெட்டித்துறை நெடியகாடு மற்றும் ஊறணிப் பகுதியில் உள்ள இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் 13 பேர் காயமடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வல்வெட்டித்துறைப் போலீசார் ஏழு சந்தேக நபர்களை கைது செய்து நேற்று ஞாயிற்றுக் கிழமை பருத்தித்துறைநீதிவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தினர். இதன்போது நீதவான் இருவரை பிணையில் விடுவிக்குமாறும் எனைய நால்வரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் ஒருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்டவாறு இன்றைய தினக்குரல் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.