குளிர்த்தி வரை இடம்பெறும் தீ மிதிப்புக் கரகங்கள், நேற்று ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2015 (வியாழக்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மனை வேண்டி அடியார்கள் ஈடுபடும் இன்னொமொரு நேர்த்திக்கடன் தீ மிதிப்பு கரகம் ஆகும். வருடத்தில் இது எந்த நாளும் நடைபெறக் கூடியது என்றாலும், வருடாந்த மகோற்சவம் முடிந்த பின்னர் இது அதிகமாக, அதுவும் குளிர்த்தி வரை இடம்பெறுவது வழமையாகும்.
அந்த வகையில் நேற்று தீ மிதிப்புக் கரகங்கள் இடம்பெற்றது.அம்மன் கோயிலில் செடில்களுடன் புறப்பட்ட அடியார்களின் கரகங்கள் வழமை போல் நெடியம்பதி பிள்ளையார் கோயிலில் ஆரம்பமாகின. கரகங்களை வரவேற்க வீதியில் நிறைகுடங்களும் வைக்கப்பட்டிருந்தன.
அம்மன் கோயில் வாசலில் இடம்பெற்ற தீ மிதிப்பைக் காண ஏராளமானவர்கள் கூடியிருந்தன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.