நேற்று இரவு கொழும்புக்கு மேலாகச் சென்ற புயல் மேற்கு வட மேற்குத் திசையில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அதி தீவிர தாழமுக்கம், தற்பொழுது புயலாக மாறியுள்ளது. இதற்கு Ockhi (ஒஹி, ஒக்ஹி) எனப் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (India meteorological department) பெயரிட்டுள்ளது.
தற்பொழுது மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் இந்திய இலங்கை நேரப்படி இன்று காலை 0530 மணிக்கு அகலாங்கு 6.7 வடக்கு, நெட்டாங்கு 78.3 கிழக்கு என்னும் பகுதியில், கன்யாகுமரிக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் சுமார் 120 கடல் மைல்கள் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
வங்காள விரிகுடாவில் இந்த வருடம் ஏற்பட்டுள்ள மூன்றாவது புயல் இதுவாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.