கனடா முத்துமாரி அம்மன் பொதுக் கூட்டம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2017 (சனிக்கிழமை)
அருள்மிகு கனடா முத்துமாரி அம்பாள் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00மணிக்கு ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் ஆலய வாடகை, கணக்கறிக்கை மற்றும் நிர்வாகம் சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஆலய அறங்காவலர் சபையினர் வெளியிட்டுள்ள மேலதிக விபரங்கள் வருமாறு, தற்போதைய நிதியாண்டில் 6 மாதத்திற்கு மேல் அங்கத்துவமுடைய சந்தாப்பணம் நிலுவையில் இல்லாத அங்கத்தவர்கள் மட்டும் இக்கூட்டத்தில் பங்கு பற்றத் தகுதியுடையவர்கள். நிறைவேற்றப்பட்ட ஆலய யாப்பின் பிரகாரம் கூட்டம் நடைபெறும்.
அருள்மிகு கனடா ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எலும்ச்சை விளக்கேற்றுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
கணபதிஹோமம், நவக்கிரகசாந்தி, சர்ப்பசாந்தி, அன்னதானம், விசேட அபிஷேகங்கள் செய்ய விரும்பும் அdiயார்கள் முன் கூட்டியே ஆலய செயலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அம்பாளுக்கு எலுமிச்சை மாலை, வேப்பம் இலை மாலை முதலியவற்றையும் ஆடிசநேயப் பெருமானுக்கு வெற்றிலை மாலையையும் அர்ச்சித்துக் கொள்ளலாம். இவற்றுக்கு எந்தக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.