பிரித்தானியா தமிழர் விளையாட்டுச்சங்கத்தின் 4 ஆவது வருட உதைபந்து போட்டி நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2014 (திங்கட்கிழமை)
பிரித்தானியா தமிழர் விளையாட்டுச்சங்கத்தின் (British Tamil Sports Association) 4 ஆவது வருட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது.
நேற்று முற்பகல் சுமார் 11 மணியளவில் ஆரம்பித்திருந்த போட்டியில் பல தமிழர் விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. வல்வை புளூஸ் தரப்பில் Under 10, Under 14 ஆகிய இரு அணிகள் மாத்திரமே பங்குபற்றியிருந்தன.
இந்த இரு அணிகளும் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை வந்து (Runners up) இரண்டாம் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டன.
போட்டிகள் யாவும் wimbledon Commons extension, Robin hood way, London SW15 3QS என்னும் இடத்தில் இடம்பெற்றிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.