யாழ். மாவட்டத்தில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினையைக் குறைக்கும் முகமாக இலங்கையிலுள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை ஒன்றினை யாழ். மாவட்டத்தில் நிறுவுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையில் இலங்கை முதலீட்டுச் சபையின் வடமாகாணக் காரியாலயம் (Board of investment of Srilanka, Northern Office) முடிவு செய்துள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபையின் சிரேஸ்ட பிரதிப் பணிப்பாளர் ஜெயமனோன் தெரிவித்தார் என பத்திரிகைச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்வதற்கு ஆர்வமுள்ளவ ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விபரங்கள் திரட்டப்படுகின்றது. இளைஞர், யுவதிகள் தங்களின் கல்வித்தகைமை மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு தரங்களிலும் வகைகளிலும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் தங்களது பிரதேச செயலகங்களில் அல்லது இலங்கை முதலீட்டுச்சபை காரியாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.