வல்வெட்டித்துறை 2000 வருடங்கள் பழமை வாய்ந்த ஆதியான குடியிருப்புக்களில் ஒன்று - பேராசிரியர் சி.பத்மநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2017 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகர்ப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதலாக மக்கள் குடியிருப்புக்கள் தொடர்ச்சியாக நிலை பெற்று வருகின்றமைக்கான சான்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியார் கலாநிதி சி.பத்மநாதன் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக் கட்டுரைகளைச் சுமந்து வரும் மாத இதழான 'கலைக் கேசரியில்' வெளிவந்துள்ள சிறப்பு ஆய்வுக் கட்டுரையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டடுள்ளது.
குறித்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டடுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
அது எமது ஆதியான புராதனக் குடியிருப்புகளில் முக்கியமானதாக இருப்பதாக அறியக்கிடக்கிறது.
சுமார் இரண'டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.
தென்னிந்தியாவிலிருந்து பரவிய ஆதி இரும்பு காலப் பண்பாட்டு மக்களே யாழ்ப்பாணத்தின் ஆதியான குடிமக்கள் என்பதை ஏற்கனவே பொன்னம்பலம் இரகுபதி ஆய்வுகள் மூலம் நிறுவியதாக பத்மநாதன் குறிப்படுகிறார்.
வல்வெட்டித்துறை புராதான குடியிருப்பு என்பதற்கான ஆதாரங்கள் வல்வெட்டித்துறை சிவன் கோயில் கிணற்றடியியிலும் அதற்கு அருகிலுமுள்ள கல்வெட்டுகளில் அடையாளம் கண்டிருக்கிறார்.
கிணற்றுக் கட்டில் நடுவே குடையப்பட்ட சதுரமான கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன..
அதே போல கிணற்றடியில் பெரிய நீர்த் தொட்டி காணப்படுகின்றது. அதன் எல்லாப் புறங்களிலும் புராதனமான எழுத்து வடிவங்கள் காணப்படுகின்றது.
அதே போல வல்வெட்டித்துறை வேம்படியிலும், வாடி லேனிலுமுள்ள (வாடி ஒழுங்கை) புராதன கற்செக்குகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன
அதுவே இதுவரை இனங்காணப்பட்ட கற்செக்குகளில் மிகப் பெரியதாம். 40கிலோ வரையான தானியத்தைப் போட்டு அரைக்கக் கூடியதாகவுள்ளது.
கலைக் கேசரியில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா. (Canada)
Posted Date: July 24, 2017 at 17:14
வரலாற்றை தேடிக்கொண்டிருக்கும் எம்போன்றவர்களுக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கலாநிதி சி.பத்மநாதன் அவர்களது ஆய்வின் மூலம் வல்வையின் செய்தி அறிந்ததும் எமக்கெல்லாம் இனிப்பான செய்தியாக இருந்தது. பேராசிரியருக்கும் கலைக்கேசரி குழுமத்தினர்க்கும் வல்வெட்டித்துறை.ORG க்கும் நன்றிகள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.