அன்பு, பண்பு, பாசம், பொறுமை, அமைதி எல்லா நற்குணங்களையும் அமையப் பெற்றவர் அன்னார் ஆறுமுகம் அதிரூபசிங்கம் (மாஸ்ரர்) அவர்கள் 24-08-1938 இல் மலர்ந்து 06-07-2017 இல் இவ்வுலகை விட்டு உதிர்த்தாலும் அன்னார் இவ்வுலகில் வாழ்ந்த காலப்பகுதியில் அவருடைய சேவைகள் எண்ணிலடங்காதவை .
அந்த வகையில் ஸ்ரீ செல்வச் சந்நிதி கோவிலடியில் அமைந்திருக்கும் பொன்னொளி சனசமூக நிலையத்தின் ஆரம்ப காலத் தலைவராக தமது பொறுப்பினை ஏற்று இவ் நிலையத்தினூடாக தமது சேவையினை அன்னார் நீண்ட காலம் ஆற்றிவந்தார்.
மேலும் அன்னார் தலைவராக எமது நிலையத்திற்கான நிரந்தரக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சியில் முக்கிய பங்கினை வகிப்பதுடன் தமது உடல் உழைப்பினையும் மிகச் சிறப்பாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்னார் எமது சனசமூகத்தினூடாக சத்தியவான் சாவித்திரி என்ற நாடகத்தினை நடாத்துவதில் மிகத் துடிப்புடன் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னார் ஆற்றங்கரை வேலவனின் சிறந்த பக்தனாகவும், ஆன்மீகத்தொண்டு ஆற்றுவதில் ஆதிக ஈடுபாடுள்ளவராகவும் விளங்கினார்.
ஆத்துடன் ஆன்மிகம் தொடர்பான நூலினையும் வெளியிட்டுள்ளார்.
தோற்றம் உண்டேல் மறைவும் உண்டு
பிறப்பு பிறந்தவரை அழவைக்கும்
இறப்பு பிறரை அழவைக்கும்
இது இயற்கையின் நியதி, அவர் உடம்பு அழிந்தாலும் வாழ்ந்த முறை, அவர் பெயர், புகழ் என்றும் அழியாது. சந்நிதியானின் பாதாரவிந்தங்களில் முத்திப் பேறு பெற்ற ஐயா எல்லையில்லாப் பேரின்பத்தில் வாழ்க வாழ்கவென வேண்டி அமைவோமாக.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.