அதிரூபசிங்கம் அவர்கள் பேரானந்த பெருவாழ்வு எய்திய பூத் தொண்டர் - பாலசுப்ரமணிய ஐயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2017 (வியாழக்கிழமை)
அதிரூபசிங்கம் அவர்கள் பேரானந்த பெருவாழ்வு எய்திய பூத் தொண்டர்
தான் பதித்த இடமெல்லாம் புகழ் பதித்து சேவையையும் தியாகத்தையும் தனதாக்கி எல்லோருடனும் அன்பாகவும்,பண்பாகவும் வாழ்ந்த திரு.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள், தனது சிறுவயது முதல் இறுதி நாள் வரை செல்வசந்நிதி ஆலயத்தில் பூத் தொண்டு செய்து சந்நிதியானின் பக்தராக மட்டுமன்றி, ஆற்றங்கரை வேலனின் பக்தர்களையும் கவர்ந்த திரு.ஆறுமுகம் அதிரூபசிங்கம் இன்று மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார்.
இலங்கை போக்குவரத்து சபையில் நடத்துனராக இருந்த இவர் அறிவிப்பாளர், மல்யுத்த வீரர், நாடக்குழு இயக்குனர், நடிகர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்துலகில் ஆசிரியர் என பல்துறைசார் புலமையாளராக விளங்கியவர் .
பூத் தொண்டர் அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம்
தொண்டைமானாறு பொன்னொளி ஐக்கிய இலவச வாசகசாலையின் ஆரம்ப அங்கத்தவராக இருந்ததுடன் இவ் வாசிகசாலையின் சார்பில் "சுமங்கலி", "சோக்கிரட்டீஸ்" ஆகிய இரு நாடகங்கள் குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் நாடகப் போட்டியில் பங்குபற்றி பரிசும் பெற்றது.
எல்லோராலும் "மாஸ்ரர்" என அழைக்கப்பட்ட அமரர் அவர்கள் ஆற்றங்கரை வேலனின் பக்தி உந்தலிளால் "ஆற்றங்கரை வேலன்" என்ற நூலை வெளியிட்டார். இவர் மறைந்தாலும் இவருடன் பழகியவர்களின் மனங்களில் என்றும் வாழ்வார். என்னாரின் மறைவால் ஆறாத்துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு சந்நிதி யானின் மூத்த பூத் தொண்டர் என்ற வகையில் எம்மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல பரம்பொருளுடன் இரண்டறக் கலந்து அருள்மிகு செல்வச் சந்நிதி வேலவப் பெருமானின் அர்ச்சிக்கப்பட்ட மலராக விளங்கி பேரானந்தப் பெருவாழ்வு பெறுவாராக.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.