வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று வெள்ளிக்கிழமை கடல் சார் விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதன் வரிசையில் முதலில் 21 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 21 வயதுக்கு மேற்பட்டோருக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பல இளைஞர்களுடன் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்று வல்வையின் இன்றைய நாயகன் ஆனார் 62 வயதடைய முதியவர் திரு. T . பாலேஸ்வரன். இவர் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: March 19, 2017 at 12:35
சிகரங்களை எட்டித்தொடுவதற்கு வயது ஒருபோதும் ஒரு தடையல்ல என நிரூபித்த உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் வீரர் திரு பாலேஸ்வரன் அண்ணாவின் புகழ் உதயசூரியனின் ஒளிவெள்ளம் உலகெங்கும் பிரகாசிப்பதுபோல் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.