வல்வையிலும் மழை, 6 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி இதுவரை பதிவாகியுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2017 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்ச்சியின் சில பகுதிகளில் இன்று முற்பகலிலும் அதனைத் தொடர்ந்து தற்பொழுது பிற்பகல் 0315 இலிருந்து மழை பெய்து வருகின்றது. வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடிப் பகுதியில் இன்று பிற்பகல் 0345 மணி வரை 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வானம் மேக மூட்டத்துடன் (Overcast) இருப்பதுடன் மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.
இந்த வருடம் வட கீழ் பரவுப் பெயர்சிக் காலநிலை (North east monsoon) சரியாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஏற்படாததால் வடக்கு கிழக்கு மிகவும் வறட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறபட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் மழை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே நேற்றிலிருந்து நாட்டின் வடக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்யும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனுடன் சம்பந்தப்பட்ட எமது முன்னைய செய்தி
நாளை தொடக்கம் மழையுடன் கூடிய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.