யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ளுராட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
இதன்போது யாழ்மாவட்ட செயலாளர் குறிப்பிடுகையில்,
இம்முறை பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் பொது இடங்களில் பிரச்சாரம் செய்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் பாரதூரமான சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
சாவகச்சேரி, பருத்தித்துறை, உடுவில், சண்டிலிப்பாய், வேலணை ஆகிய இடங்களில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் முறையீடு செய்வதற்காக முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
யாழ் மாவட்ட செயலகத்திலும் இது தொடர்பில் முறைப்பாடுகளை செய்யமுடியும். பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றுவது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுளளதாக யாழ் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.