எங்கள் குடும்பவிளக்கு எங்களை விட்டு பிரிந்த துயரச் செய்தி கேட்டு அருகில் இருந்து உடலாலும் உள்ளத்தாலும் துணை நின்றோருக்கும் நேரிலும் தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறித் துக்கம் பகிர்ந்தவர்களுக்கும் உண்டி கொடுத்தோருக்கும் உடனிருந்து அவ்வப்போது தேவையான எல்லா உதவிகளையும் செய்தவர்களுக்கும் பூமாலைகள், மலர்வளையங்கள் சார்த்தி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் அஞ்சலிப் பிரசுரங்களைப் பிரசுரித்தவர்களுக்கும் இணையதளங்களின் ஊடாக தமது அஞ்சலிகளை செலுத்தியவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலியைப் பிரசுரித்தவர்களுக்கும் மரணக்கிரியை மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
.மற்றும் 16-03-2022 புதன்கிழமையன்று எமது இல்லத்தில் நடைபெறும் அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் மற்றும் மதியபோசனத்தில் கலந்து கொள்ளுமாறும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.