கடந்த 28.04.2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த மகாலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் காலஞ்சென்ற செய்தி அறிந்து, நேரில் வந்தும் தொலைபேசி மின்னஞ்சல் மூலமாகவும் துயர் பகிர்ந்த அனைவருக்கும் இறுதிக்கிரியைகளில் பங்குபற்றியவர்களுக்கும் பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் வரும் 27.05.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 07.00 மணிக்கு கோவில் வீதி, முகத்துவாரத்தில் அமைந்துள்ள அந்தியேட்டி மடத்திலும், வீட்டுக்கிரியைகள் மறுநாள் 28.05.2016 சனிக்கிழமை காலையில் எமது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நண்பகல் 11.30 மணியளவில் இலக்கம் 17A , மயூரா பிளேஸ், கொழும்பு 06 இல் அமைந்துள்ள மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ள ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.