வல்வை நெடியகாடு குளத்தில் குளிக்கும் போது இளைஞர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2015 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு குளத்தில் இன்று காலை நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி பலியாகியுள்ளார்.சம்பவத்தில் 27 வயதுடைய கொற்றாவத்தையைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குளத்தில் நீச்சல் பழகிக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி ஆபத்தான நிலையிருந்த இவர் முச்சக்கர வண்டி மூலம் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் இவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளானது
இளைஞனை ஆபாத்தான நிலையில் முச்சக்கர வண்டியில் எடுத்துச் செல்லும் போது, குறித்த முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகி சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: November 19, 2015 at 01:25
மிகவும் கவலையான செய்தி அவரது உயிர் சாந்தியடையட்டும்
Uthayan (Srilanka)
Posted Date: November 18, 2015 at 18:58
Rip
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.