உலகின் முதலாவது குகை கடல் பாதை நோர்வேயில் அமையவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2017 (வெள்ளிக்கிழமை)
உலகின் முதலாவது குகை கடல் பாதையை (World’s first ship tunnel) நோர்வே அமைக்கவுள்ளது. 319 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமையவுள்ள 1.7 கிலோமீட்டர் நீளமான இந்த ஸ்ரட்ட குகை (Stud tunnel) அமைக்க சுமார் 10 வருடங்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
கப்பல்களுக்கு பெருத்த சவாலாக அமையும் நோர்வேயின் மேற்குக் கரைப் பக்கத்தில் Treacherous என்னும் துறைமுகத்தில் இந்தக் குகை அமைகின்றது.
45 மீட்டர் உயரமும் 36 மீட்டர் அகலுமும் கொண்ட இந்தக் குகை கடற்பாதை 645 மீட்டர் உயரம் கொண்ட மலையின் கீழால் செல்லவுள்ளது.
இந்த குகை கடற்பாதை வழியாக 12 மீட்டர் ஆழம் கொண்ட கப்பல்கள், நோர்வே கடலில் (Norvergian sea) இருந்து வடக்கிற்கும் வட கடலுக்கும் (north sea) செல்ல முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.