ராட்சத யானை வல்வை வீதியில், ஆழியில் கரைப்பதற்காக விநாயக முகூர்த்தங்கள் சேகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2015 (வியாழக்கிழமை)
இன்று பொங்கல் தினத்தன்று வீடுகளில் கடந்த ஒரு மாதமாக வைக்கப்பட்டிருந்த விநாயக முகூர்த்தங்களை சேகரிக்கும் சமயத்துடன் கூடிய கலாச்சார நிகழ்வு தற்பொழுது வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவருகின்றது. சேகரிக்கப்படும் விநாயக முகூர்த்தங்களை ஆழியில் அதாவது ஊரணி கடற் கரையில் கரைக்கப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த பெரியவர்களாலும், இளைஞர்களாலும் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வில் இன்று ராட்சத யானை உருவம் ஒன்றும், மற்றும் வன விலங்குகளை ஒத்த உருவங்களும் இந்த நிகழ்வைச் தற்பொழுது சிறப்பிக்கின்றன.
மார்கழி மாதமுழுவதும் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயக முகூர்த்தங்களானவை சேகரிக்கப்பட்டு, ஊர்தியில் வைத்து மங்கள வாத்தியத்தியத்துடன் எழுந்தருளச் செய்து, நீர் சார்ந்த நிலைகளான சமுத்திரம் அல்லது ஆழியில் கரைக்கப்படுவது தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இந்துக்களின் ஒரு மரபாகும்.
இந்த மரபுக்கிணங்க இந்த வருடமும் மிகவும் சிறப்பாக யானை மற்றும் வாகனத்தில் விநாயக முகூர்த்தங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.