வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா சிறப்புற நிறைவு (படங்கள், காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2014 (திங்கட்கிழமை)
கடந்த 8 நாட்களாக நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று நண்பகல் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை சுமார் 10.30 மணியளவில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து தேர் வீதி உலா முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
குறித்த தேர்த் திருவிழாவின் நிகழ்வுகள் எமது இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வும் எமது இணையதளத்தினூடாகவோ (www.valvettithurai.org) நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
இன்றைய தேர்த்திருவிழாவின் காணொளி மற்றும் படங்களின் தொகுப்பினையும் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.