ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2017 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் 29.07.2017 ஆம் திகதி சனிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் முத்துச் சப்பறத் திருவிழா எதிர்வரும் 06.08.2017 அன்றும் அதனைத் தொடர்ந்து 07.08.2017 திங்கட்கிழமை அன்று தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
ஆதிகோவில் ஆதி வைரவர் கோயிலானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 1 கிலோமீற்றர் தொலைவில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியிலிருந்து வடக்குத் திசையில் கடற்கரையில் அமைந்துள்ளது.
படம் - ஆதிகோவில் ஆதிவைரவர் கோயில் , கடந்த வருட கொடியேற்றம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.