முன்னாள் கடற்புலி போராளிக்கு பிரித்தானிய வல்வை நலன் புரிச்சங்கம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2017 (புதன்கிழமை)
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான செபஸ்தியான்பிள்ளை அவர்கள் 2007 ஆண்டு ஏற்பட்ட கடல் யுத்தத்தின் போது முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயம்காரணமாக அன்றில் இருந்து இன்றுவரை இடுப்பிற்குகீழ் இயங்காத நிலையில் பெரும் உபாதைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
தற்போது அவரது கல்லீரலிளும் பாதிப்பு ஏற்பட்டதனால் அதற்கான மருத்துவ உதவி எதுவுமற்ற நிலையில்.
அவரது மருத்துவ உதவி தேவையின் ஒருபகுதி பணம் ரூபா 40000 ஐ வல்வை மக்களின் சார்பாக பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் வழங்கப்பட்டது. அதற்கான நன்றிக்கடிதமும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த வருடம் மேலும் இவ்வாறான பல செயற்பாடுகளை தொடர்ந்த செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளோம் என்பதனையும் இங்கு குறிப்பிடவிரும்புகின்றோம்.
ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்த்தியான பின்னர் விபரங்கள் உங்களுக்கு அறியத்தரப்படும்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் வல்வை மக்களாகிய நீங்களும் பங்கெடுக்க விரும்பினால் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.