வல்வெட்டித்துறை நகரசபைக்கு மலசலங்களை அகற்றக் கூடிய தாங்கி (Gully Bowser) ஒன்று வடமாகாணசபையால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தாங்கி வழங்கும் நிகழ்வு கடந்த 31/08/2016 ஆம் திகதி வடமாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் Gully Bowser இனுடைய சாவியை வல்வை நகரசபை செலாளர் ச.பிரசாத் அவர்களிடம் வழங்கியிருந்தார். இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உட்பட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாகாண ரீதியாக ஒதுக்கப்படும் அபிவிருத்தி நன்கொடை நிதியில் 9 மில்லியன் ரூபா நிதியிலேயே வல்வெட்டித்துறை நகர சபைக்கு குறித்த இந்தத் தாங்கி கிடைத்துள்ளதுடன் மேலும் ஒரு நீர் தாங்கி (Water Bowser) வழக்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.