வல்வை மகளீருக்கு சிவன் அறக்கட்டளை மாதாந்தம் நிதி உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2017 (சனிக்கிழமை)
வல்வை மகளிர் கல்லூரியில் ஜீசிஈ. சாதாரண தரப் பரீட்சையின் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிவன் பவுண்டேசன் நிறுவுனர் வேலாயுதம் கணேஸ்வரன் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்திலுள்ள கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக சிவன் அறக்கட்டளை நிறுவுனரினால் மெல்லக்கற்போருக்கான செயல்த்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அந்தவகையில் கடந்த 26.4 2017 இல் புதன்கிழமை வல்வை மகளிர் கல்லூரிக்குச் சென்ற நிறுவுனர் வேலாயுதம் கணேஸ்வரன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் க.சதீஸ் ஆகியோர் கல்லூரி அதிபர் செல்வி சுப்பிரமணியக்குருக்களைச் சந்திந்து இத்திட்டம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
இதனைச் செவிமடுத்த அதிபர் தற்போது சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்வி வீதம் குறைவாக காணப்படுகின்றது. இம்முறை நடைபெறவுள்ள பரீட்சையில் பாடசாலைக்கு 67வீத சித்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை மேலும் 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா தேவையாகவுள்ளது அதனைத் தந்துதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்டு குறித்த மாணவர்களின் கல்வி மேம்படுத்த மாலை நேர வகுப்புக்களை ஆரம்பிக்குமாறும் அதற்கான 20ஆயிரம் ரூபாவை மாதாந்தம் வழங்குவதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்து வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் பாடசாலை நிர்வாகமும் நிறுவுனரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.