வல்வை கி.செல்லத்துரை ஆசிரியருக்கு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் பட்டமளித்து கௌரவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2016 (திங்கட்கிழமை)
நேற்று சனிக்கிழமை டென்மார்க் வயன் நகரத்தில் உள்ள உஸ்iபாடசாலை அரங்கில் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கலை இலக்கிய பண்பாட்டு சர்வதேச மாநாடும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கலை இலக்கிய பண்பாட்டுத்துறைக்கு அரும்பணியாற்றியமைக்காக கி.செல்லத்துரை ஆசிரியருக்கு முத்தமிழ் வித்தகர் என்ற பட்டம் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பேராளர்களும், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட பல நாடுகளில் இருந்தும் பேராளர்கள் வருகை தந்திருந்தனர்.
மேலும் இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் நிலக்கிளி அ. பாலமனோகரன், நெல்லியடி அம்பலத்தாடிகள் புகழ் இளையபத்மநாதன், டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினர் ரோல்ஸ் ராவன், நாட்டுப்புற இலக்கியத்திற்காக பேராசிரியர் பாலசுகுமாரன், பேராசிரியர் விஞ்ஞானி உதயாகரன் துரைசாமி கனடா, தமிழ் ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி ஜேர்மனி ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.