வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் முத்துக்குமாரு மற்றும் அம்பிகை அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை மாலை காலிறுதி ஆட்டமும், இன்று காலை அரையிறுதி ஆட்டமும் மாலை இறுதியாட்டமும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதாலவது அரையிறுதி ஆட்டத்தில் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் இளங்கதிர் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை சைனின்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் 5:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.
உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின்
தொடர் நாயகன் சீலன் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம்
ஆட்ட நாயகன் கபில்ராஜ் இளங்கதிர் விளையாட்டுக்கழகம்
சிறந்த கோல்காப்பாளர் -பிரேம்ராஜ் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம்
உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் பிரதம விருந்தினராக திரு.A.S இராஜேந்திர (பேராசிரியர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. M. வேதாபரணம் (தலைவர்- வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக்) அவர்களும், திரு A.அருளானந்தசோதி (செயலாளர் - பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்) அவர்களும், திரு.V.கார்த்திகேசன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
பரிசளிப்பு நிகழ்வில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு பிரதான அனுசரணையாளரான திரு.மு.தங்கவேல் அவர்கள் உரையாற்றுகையில் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கென சொந்தமான மைதானம் இல்லை எனவும், இதனை வெளிநாடுகளில் வாழ்கின்ற வல்வை மக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.