மரண அறிவித்தல் - திருமதி தில்லைஉமாதேவி காத்தலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2015 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி தில்லைஉமாதேவி காத்தலிங்கம்
மலர்வு - 12.08.1943 உதிர்வு - 23.07.2015
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி தில்லைஉமாதேவி காத்தலிங்கம் அவர்கள் நேற்று வியாழக்கிழமை (23.07.2015) தனது 72 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி பாலசுப்ரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற திரு திருமதி சின்னத்துரை அன்னலஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
திரு.காத்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இன்பராணி, ரவி மற்றும் காலஞ்சென்ற ராம்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திரு.அருளானந்தம் (தாசன், லண்டன்), கோமதி (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்.
இளைப்பாறிய இலங்கை புகையிரதச் சேவை இலாகா அதிகாரி திரு.சங்கரப்பிள்ளை (திருமலை), காலஞ்சென்றவரும் இலங்கை இரசாயன கூட்டுத் தாபன உயர்நிலை ஊழியரான திரு.சண்முகநாதன், இளைப்பாறிய இலங்கை எழுதுவினைஞர் சேவை உயர்நிலை ஊழியரான திரு மீனாட்சிசுந்தரம் (வல்வெட்டித்துறை), திருமதி அன்னலஷ்மி மகேசதாசன் (லண்டன்), திரு.அருணகிரிநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி அம்மாள், சீதாலஷ்மி, மகேசதாசன் மற்றும் அன்னபூரணி அம்மா (கண்மணி), சிவகாமசுந்தரி (சிவகாமி), காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை (முத்தன்), செள்ளப்பாக்கியம் (செல்லன்), பொன்னம்மா (பொன்னன்), ஈஸ்வரலிங்கம், அப்புலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரகாஸ், தர்சன், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அபிவர்ணா, தாருகேசன் ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியுமாவார்.
இறுதிக் கிரியைகள் யாவும் இன்று அன்னாரின் வித்தனை ஒழுங்கையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் இன்று மாலை 5 மணியளவில் வல்வை ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் பணிவன்புடன் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.