சாரணர் இயக்கத்தை தோறுவித்த பேடன் பவலின் 155 ஆவது நினைவு தினம் நாட்டின் பல பாகங்களிலும் நேற்று 22.02.2014 அன்று அனுஸ்டிக்கப்பட்டது. பருத்தித்துறை மாவட்ட சாரணர் கிளைச்சங்கத்தாலும் பேடன் பவல் நினைவுதின நிகழ்வு நேற்று அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வு யாழ் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில், சங்கத்தின் உபதலைவர் திரு.L.திரவியராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் பிரதேச செயலர் திரு.ம.பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கோட்டக் கல்வி அலுவலர் திரு.ச.சற்குணராசா அவர்களும், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் திரு.ச.வேலழகன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
வல்வை சிவகுரு வித்தியாசாலையைச்சேர்ந்த சாரணர்களும் விருது பெற்றனர்
இந்நிகழ்வில் வல்வை சிவகுரு வித்தியாசாலையைச் சேர்ந்த சாரணர்களான செல்வன்.செ.விதுசன், செல்வன்.ஸ்ரீ.அஜித்குமார், செல்வன்.பி.சதுர்ஜன் ஆகியோர் பிரதம ஆணையாளர் விருதினையும், செல்வன்.ப.மதுராஜ், செல்வன்.அ.கஜன், செல்வன்.பா.பாஸ்கரன், ஆகியோர் மாவட்ட ஆணையாளர் விருதினையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரொபேர்ட் பேடன் பவல் (Robert Baden-Powell) 1857 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி பிறந்த இவர் Scout எனப்படும் சாரணர் இயக்கத்தை 1906 ஆண்டும், 1910 ஆண்டு சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் உருவாக்கியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.