நேதாஜி வி.க 53வது ஆண்டு விழாவும் இல்ல மெய்வன்மைப் போட்டியும் நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/10/2017 (திங்கட்கிழமை)
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தின் 53 ஆவது ஆண்டு விழா மற்றும் இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு நேதாஜி உல்லாசக் கடற்கரையில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.இராசகோபால் ரவிக்குமார் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.இராமதாஸ் ரமேஸ் (பிரதேச செயலர், மாந்தை கிழக்கு), திரு. சந்திரசேகரம் பிரசாத்(நகராட்சி மன்ற செயலாளர், வல்வெட்டித்துறை) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு.சிவசுந்தரம் சோதிமயம்(மூத்த உறுப்பினர்), திரு.பாலசுப்பிரமணியம் ஜெயக்கொடி(மூத்த உறுப்பினர்), திரு.இராமலிங்கம் இராமச்சந்திரன்(மூத்த உறுப்பினர்), திரு சரவணப்பெருமாள் சந்திரசேகரம்(மூத்த உறுப்பினர்), திரு.வேலுப்பிள்ளை இலட்சுமிசுந்தரம்(மூத்த உறுப்பினர்), திரு.சின்னத்துரை இரத்தினகுமார்(மூத்த உறுப்பினர்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் ஓட்டம், தடை ஓட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆண்கள் பெண்களின் இடைவேளை நிகழ்வுகளும், கழகங்களுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான கயிறுழுத்தல் நிழழ்வுகளும் நடைபெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.