நெடியகாடு பிள்ளையார் தீர்த்தத் திருவிழா நிறைவு (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2016 (வெள்ளிக்கிழமை)
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நிறைவெய்தியது.
இன்று காலை சுமார் 7 மணியளவில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து சுமார் 0730 மணியளவில் விநாயகப் பெருமான் இதர சுவாமிகள் சகிதம் தீர்த்தம் ஆடுவதற்காக வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரை நோக்கி புறப்பட்டார். இதனைத் தொடர்ந்து தீர்த்த உற்சவம் சுமார் 0830 மணியளவில் நிறைவெய்தியது.
தீர்த்தோற்சவம் முடிந்த பின்னர் சுவாமி வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வந்தடைந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.