வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று 08.04.2017 (சனிக்கிழமை) வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் இடம்பெற்றது.
பிற்பகல் 3 மணியளவில் திரு.தேவதாஸ் அவர்கள் மங்கள விளக்கேற்ற பாலர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக கணபதி பாலர் பாடசாலையின் முன்னாள் ஆசிரியை திருமதி. வத்ஸ்சலா பிறேமராசா அவர்களும், கௌரவ விருந்தினராக கணபதி படிப்பகத்தின் முன்னாள் தலைவர் திரு.தி.நாகேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
மாலை 6 மணிவரை இடம்பெற்ற நிகழ்வில் பாலர்களின் விளையாட்டுக்கள், பழைய மாணவர்களுக்கான போட்டி மற்றும் வினோத உடைப்போட்டி என்பன இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.