வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா நேற்று சனிக்கிழழை மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெற்றது.
நிகழ்வில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பாலர்களின் பான்ட் வாத்தியத்திய அணிவகுப்புடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றி வைக்கும் நிகழ்வு நடைபெற்றன. இம்மங்கள விளக்கினை கணபதி படிப்பகத்தினை ஆரம்பிப்பதற்கு உந்துசக்தியாக விளங்கிய தெய்வத்திரு.தெ.லெட்சுமிகாந்தன் அவர்கள் சார்பாக அவர்களது மகன் திரு.லெட்சுமிகாந்தன் கிருபாகரன் அவர்களும், கொத்தியால் யூனியனைச்சேர்ந்த தெய்வத்திரு.சி.பொன்னம்பலம் (பொன்ணண்ணா) அவர்கள் சார்பாக அவர்களது பாரியாரும், மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களும் ஏற்றி விழாவை சிறப்புற ஆரம்பித்து வைத்தார்கள்.
மேலும் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ. சோமஸ்கந்த தண்டபாணிக தேசிககர் அவர்களின் ஆசியுரையுடனும் விழா ஆரம்பமானது.
இந்நிகழ்வுகளின் காட்சிகளை கீழே உள்ள படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.