Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வை பற்றி

வல்வையூா் அப்பாண்ணாவின் “ கல்யாண வைபோகமே…………..” தொடா்ச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2016 (செவ்வாய்க்கிழமை)
கோவிலில் நடைபெறுவதாக நிட்சயிக்கப்படும் ஒரு சில திருமணங்கள் மட்டுமே பகற் கல்யாணங்களாக இருக்கும். ஏனையவை அனைத்தும் இரவுக் கல்யாணங்களாகவே அந்நாளில் நடந்தேறின. அதிகாலை 1 மணிக்கு “ தாலிகட்டு ” என்றால் மாலை 6 மணிக்கே சம்பிரதாயச் சடங்குகள் அனைத்தும் ஆரம்பமாகி விடும்.
 
மிகக் குறைந்த குடும்ப உறவினருடன் இரவுச் சடங்குகள் ஆரம்பமாகும். பெண் வீட்டார் ஆரவாரமின்றி மாப்பிளைக்கு வேண்டிய வேட்டி, சேட் சால்வை, முதலானவை அடங்கிய தட்டேந்தி மாப்பிளை வீட்டுக்கு வருவா். வரும்போது இவா்களின் “ குடிமக்கள் ” எனப்படுகின்ற குடும்ப சவரத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி இருவரையும் கூட்டிக் கொண்டு வர வேண்டும். சவரத் தொழிலாளி மாப்பிளைக்கு முகச் சவரம் உள்ளிட்ட சம்பிரதாயச் சடங்குகள் சிலவற்றை நிறைவு செய்வார்.
 
முதலில் தோழனும், பின்னா் ஏனையவா்களும் மாப்பிளையின் தலையில் பால் – அறுகு வைத்து “ மாப்பிளைக்குத் தண்ணி வார்க்கும் ” சடங்கு நிறைவேறும். தண்ணி வார்க்கும் நேரத்தில் மாப்பிளை அணிந்திருந்த உடுப்புகள் சலவைத் தொழிலாளிக்கு உரியவை. பின்னா் மாப்பிளை வீட்டார் ( குடிமக்களின் மனைவியாரையும் அழைத்துக்கொண்டு ) பெண் வீட்டுக்குச் சென்று இதே பாணியில் “ பெண்ணுக்குத் தண்ணி வார்க்கும் ”சடங்கும் நிறைவேற்றப்படும்.
 
இப்போது கல்யாண வைபோகத்தின் முக்கிய கட்டம் ஆரம்பமாகிறது. உற்றார் உறவினா் அனைவரும் சூழ்ந்து வர மங்கல வாத்திய இசையுடன் மாப்பிளையை அழைத்து வர தோழன் புறப்பட்டுச் செல்வார். மாப்பிளையின் சதோரி அல்லது தாயார் மாப்பிளைக்கு வேண்டிய உடைகளுடன் – கழுத்து மாலையும் வைத்து தட்டேந்தி தோழனுக்குப் பின்னே நடந்து வருவார். காளிகோயில் மலையுமாணிக்கா் அப்பாவின் பிள்ளைகளான மகாலிங்கம், பொன்னம்பலம் போன்றவா்களிடமிருந்து வாடகைக்குப் பெறப்பட்ட காஸ் விளக்குகளை கூலியாட்கள் தலையிற் சுமந்தபடி ஊர்வலத்தில் வருவா். பின்னாளில் காஸ் விளக்குகள் பெற்றோமாக்ஸ் விளக்குகளாகப் பரிணாமம் பெற்றன.
 
மாப்பிளை வீட்டுக்கு வந்து சோ்ந்ததும், தோழன் – பெண்ணின் தாய், தகப்பன் ஆகிய மூவரும் சாப்பிட வேண்டியதும் ஒரு சம்பிரதாயமே. இப்போது “ மாப்பிளை ஊா்வலம் ” ஆரம்பமாகிறது. சலவைத் தொழிலாளா்கள் மேற்பாவாடை பிடித்து நில பாவடை விரித்து வர, மணமகனின் சகோதரி அல்லது தாயார் தாலித்தட்டினைத் தலையிற் சுமந்துவர, தோழனின் சின்னி விரலைப் பிடித்தபடி மாப்பிளை உற்சாகமான நடை பவனியில் ஊர்வலம் நகா்ந்து பெண் வீடு வந்து சேருகிறது.
 
வசதியானவா்கள் நன்கு அலங்கரிக்கப்பட்ட காரில் மாப்பிளை அழைப்பை மேற்கொள்வதும் உண்டு. இரவுத் திருமணங்களாக வீட்டில் நடைபெற்ற திருமணங்களைப் பெரும்பாலும் பரமேஸ்வராக் குருக்கள் நிறைவேற்றி வைத்தமையே ஞாபகத்தில் உள்ளது. (மாப்பிள்ளை – பெண்ணுக்குக் தண்ணி வார்த்தல், சவரத் தொழிலாளி – சலவைத் தொழிலாளி மேற்பாவடை – நிலபாவாடை போன்ற சங்கதிகள் அனைத்துமே இடைக்காலத்திலேயே வழக்கொழிந்து போய்விட்டன. இருந்தாலும் நமது ஊரின் அந்நாளைய கல்யாண வைபோக வழமை எப்படி இருந்தது எனும் தகவலைத் தருவதற்காகவே மேற்குறித்த இரண்டு – மூன்று பந்திகளும் தரப்பட்டன.)
 
அளவுக்கு அதிகமான வசதி படைத்தவா்களின் “ மாப்பிளை அழைப்பு ” மிக விசேடமாக நடைபெற்றமையும் ஞாபகத்தில் உள்ளது. உதாரணத்திற்கு ஒரு நிகழ்வினைத் தருகிறேன். ரேவடி ஒழுங்கையின் மேற்குப் புறத்தில் T.S நாகரெத்தினம் முதலாளியின் மாடிவீடு இன்றும் உள்ளது. அவரது ஒரே மகள் சறோஜினிதேவிக்கும், சிதம்பராவிற்கு கிழக்காகக் குடியிருந்த கிருஷ்ணபிள்ளையின் சகோதரா் சிதம்பரப்பிள்ளை எஞ்சினியருக்கும் நடைபெற்ற திருமணம் – ஒரு காலத்தில் ஊா் மக்கள் அனைவராலும் பேசப்பட்ட ஒரு திருமண வைபவமாகும்.
 
ரேவடி ஒழுங்கையில் அவரது வீட்டிலிருந்து – சூத்திரக் கிணறு – பிரதான வீதி வரைக்கும், பிரதான வீதியில் சந்தி வரையிலும் – வாகனங்கள் வீதியால் போய்வரக் கூடியதாக – வீதிக்கு மேலாக மூடிய பந்தலிட்டு – மணிச் சோடனைகளால் வீதிகள் பிரமாதமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
 
மிகச் சிறப்பாக மணவறை போன்று அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் மாப்பிளை ஊா்வலம் ஆரம்மாகிறது. பொய்க்கால் குதிரை – கரகாட்டம் – சிலம்பாட்டம் பாண்ட் வாத்தியம் ஆகியன அணிவகுத்து வர, அதற்கு முன்னே ஊரிக்காட்டிலிருந்து ரேவடி ஒழுங்கை வரை பட்டாசுகள் தொடா்ச்சியாக வெடிக்க, மகோற்கடம் அண்ணாவின் தோட்டாகாயம் காதைப் பிளக்க, பலவிதமான அவுட்டுகளும் இரவைப் பகலாக்க, மாப்பிளை காருக்கு முன்பான – அன்று யாழ்ப்பாணத்தின் பிரபல மங்கல வாத்தியக் கோஷ்டிகள் அனைத்தும் வீதியல் முழங்கி வர ஊா்வலம் மிக மெதுவாக நகா்ந்து முன்னேறிய அழகை எமது  சிறு வயதில் நாம் வாய் பிளந்து பார்த்து வியந்திருக்கிறோம்.
 
இன்றைய நாளில் மதியம் 12 மணிக்கு வெடிச்சத்தம் கேட்டால்“ தொட்டிலில் வளா்த்துறதாக்கும் ”என்போம். மாலை 6 மணியளவில் பட்டாசு சத்தம் வந்தால் “ பிறந்தநாள் கொண்டாட்டம் ” என்போம். ஆனால், அந்த நாளில் இரவு 10 மணியளவில் பட்டாசு சத்தம் வந்தால் “ ஆருக்கோ சோறு குடுத்திட்டினம் போல ” எனப் பேசிக் கொள்வோம். நள்ளிரவில் நடந்து முடிந்த ஒரு கல்யாணச் செய்தி காலையில் காற்றோடு கலந்து காதினை எட்டும். “ வெள்ளம் வந்துட்டுது… சோத்தைக் குடுங்கோ.. ” எனும் சொற்பதத்தின் பொருள் இன்றுங்கூட நமக்குப் புரியாது போனாலும் – அதுவும் ஒரு திடீா்க் கல்யாணத்தையே குறித்தது என்பது மட்டும் நமக்குப் புரிந்திருந்தது.
 
மாப்பிளை பெண் வீட்டு வாசலுக்கு வந்ததும் மாப்பிளையின் காலுக்குத் தண்ணீா் ஊற்றிவிடும் தோழனுக்கு மாப்பிளை மோதிரம் அணிவிப்பார். பொதுவாக வீடுகளில் நடைபெறும் திருமணங்கள் மணவறை கட்டி “ அரசாணி ” வைத்து நடைபெறும் திருமணங்களாகவே இருக்கும். வசதி குறைந்தவா்கள் “ பிள்ளையார் பூசையுடன் ” தாலி கட்டி சடங்கினை நிறைவு செய்வா். பகலில் வீடுகளில் நடைபெறும் திருமணத்திற்கு தாலிகட்டி முடிந்ததும் சிரிப்பான ஒரு நிகழ்வு நடைபெறும். “ வெளியே போய் அருந்ததி பார்த்து வாருங்கள் ” என்பார் ஐயா். மணமக்களும் பந்தலுக்கு வெளியே வந்து, சம்பிரதாயத்திற்காக ஒரு முறை வானத்தை நிமிர்ந்து பார்த்து, பின்னா் மணமேடைக்குத் திரும்பி வருவா். “ அருந்ததி பார்த்தாச்சா? ” என ஐயா் கேட்டதும், பட்டப்பகலில் அருந்ததி பார்த்ததாக மணமக்கள் கூட்டாகப் பொய்யுரைப்பா்.
 
திருமணம் முடிந்த கையோடு மாப்பிளை வீட்டுக்கு மணமக்களை அழைத்துப் போய் உடன் திரும்பி வரும் சம்பிரதாயம் “ கால் மாறுதல் ” எனப்படுகிறது. இரவுத் திருமணங்களில் கால்மாறும் காரியங்கள் நடந்தேற விடியும் பொழுதாகிவிடும். அன்று மாலையில் மணமக்கள் பெண் வீட்டிலேயே தங்கியிருக்க பெண் வீட்டார் மாப்பிளை வீட்டுக்கு உழுத்தம்பட்டு “ வேள்வு ” கொண்டு போகிற வழமையும் ஒன்றுண்டு.
 
மூன்று நாள் முடிந்ததும் மணமக்களை மாப்பிளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நெருங்கிய உறவினா்களுக்கு ஆடு வெட்டி பெரிய விருந்துபசாரம் காத்திருக்கும். மறுநாள் காலையில் பெண் வீட்டிலிருந்து மணமக்களுக்கு “ இடியப்பமும் – முட்டைப் பாற்கறியும் ” கொண்டு போவார்கள் . ( இந்த வழமையும் இப்போது இல்லை) மூன்று நாட்களின் பின் மீண்டும் பெண் வீட்டுக்குத் திரும்பும்போது, அங்கு நடந்த விருந்துக்கு சற்றும் குறைவில்லாதபடி பெருவிருந்து ஏற்பாடாகியிருக்கும். பெண் வீட்டுக்கு மணமக்கள் வந்த நாள் முதல், உறவினா்கள் “ வேள்வு ” கொண்டு போவது வழமையான நடைமுறை.
 
இடைக் காலத்திய திருமணச் சடங்கு முறைமைகளிலிருந்து ஒரு சில விடயங்களில் மட்டுமே இன்றை திருமணங்கள் மாற்றம் பெற்றுள்ளதே தவிர முக்கிய நிகழ்வுகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. “ மாப்பிளை கேட்டல் ” , “ பொம்பிளை பார்த்தல் ” கால் மாறுதல் ” போன்ற சொற்பிரயோகங்கள் கூட அப்படியே இன்றும் நிலைபெற்றிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
 
அந்நாளில் ஒரே காணியினுள் ஐந்தாறு குடும்பங்களின் கூட்டான ஒரு வாழ்க்கை முறையும் – நேர வசதியும் – “ கல்யாண வைபோகம் ” மாதக்கணக்கில் நீடிக்க வசதியாகவிருந்தது. இன்றைய அவசர கோலத்திற்கு ஏற்றபடி, ஒரு காலைப் பொழுதில் 3 மணி நேர இடைவெளியில் – ஒரு திருமண மண்டபத்தில் – திருமணத்தை நடாத்தி முடித்து, தாம்பூலப் பையை கையில் வாங்கிக் கொண்டு அவரவா் சோலிக்கு (காரியங்களுக்கு) ப் புறப்படுவதுவழமையாகி விட்டது.

 

பிந்திய 25 வல்வை பற்றி:
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2016 (வியாழக்கிழமை)
“ ஊறணியில் மகா மகப்பெருவிழா ” - வல்வையூா் அப்பாண்ணா–
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2016 (வெள்ளிக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - கல்யாண வைபோகமே……….-வல்வையூா் அப்பாண்ணா-
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2016 (திங்கட்கிழமை)
இது பழங்கதையல்ல……. நேற்று முன்தினம் நடந்த புதியகதை. “ மகோதயம் ” - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2016 (புதன்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - “நாடகம்” – ஒரு கண்ணோட்டம் - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2016 (புதன்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - நார்க் கடகம் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2015 (ஞாயிற்றுக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - “ இறுதியாத்திராரதம்” - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2015 (திங்கட்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - இந்திய பக்தி - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2015 (திங்கட்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - அம்பாள் கோவில் சிவப்புக் குதிரை - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2015 (திங்கட்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - கயிறு திரித்தல் - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2015 (திங்கட்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - ஒரு தண்டையலின் டயறி - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2015 (திங்கட்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - இரட்டைநீலங்கள் - (கருநீலமும் வெளிர்நீலமும்) - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/10/2015 (சனிக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - நெற்கொழு மைதானம் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2015 (வியாழக்கிழமை)
வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் ச..வைத்திலிங்கம்பிள்ளை - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2015 (ஞாயிற்றுக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - வல்வையும் வாரியாரும் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2015 (வியாழக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை – எங்கள் வோட்டு – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2015 (சனிக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை – சாதனையாளர் சத்திவேல் – வல்லையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2015 (புதன்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை – “வல்வைச் சரித்திரம் கண்டறியாத பெருவிழா” – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2015 (திங்கட்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - தும்புத் தொழிற்சாலை - வல்வையூர் அப்பண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2015 (திங்கட்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை – சிதம்பரா சாரணீயம் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2015 (திங்கட்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை – சவுக்கடி - வல்வையூர் அப்பண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2015 (செவ்வாய்க்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை – இரவுப் பாடசாலை – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2015 (செவ்வாய்க்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை – பட்டினமும் நகரமும் 2 – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2015 (திங்கட்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை – பட்டினமும் நகரமும் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2015 (வியாழக்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை – தடிப்பேனையும் மைக்கூடும் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2015 (செவ்வாய்க்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai