வல்வெட்டித்துறை ரோமன் தமிழ் கத்தோலிக்க பாடசாலையில் அமைந்துள்ள அன்னை தெரேசா முன்பள்ளிக்கு வல்வை நலன்புரிச் சங்கம் (பிரான்ஸ்) ரூபா 40,000/- பெறுமதியான பொருட்களை அன்பளிப்புச் செய்துள்ளது. முன்பள்ளி சிறார்களுக்கான இலவச சீருடைகள், காலணிகள் மற்றும் தளபாடங்கள் என்பன இன்று காலை 0930 மணியளவில் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அன்னை தெரேசா முன்பள்ளியின் போசகர்களில் ஒருவரும் வடமாகாணசபை உருப்பினருமான திரு.சிவாஜிலிங்கம், முன்பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் சிலர், முன்பள்ளி ஆசிரியை செல்வி.மீரா, ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் வல்வை நலன்புரிச் சங்க (பிரான்ஸ்) உப தலைவர் ஆனந்தவேல் ஞானசேகரம் (சுபாஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் குறித்த முன்பள்ளியின் அவசியம் பற்றி விரிவாக கருத்துரைக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை மிகவும் குறைவான மாணவர்களை தொடர்ந்து கொண்டு, பாடசாலை மூடப்படும் அபாயத்தைக் கொண்டிருப்பதைக் கருத்திற்கொண்டு குறித்த அன்னை தெரேசா முன்பள்ளிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: June 08, 2016 at 03:27
பிரான்ஸ் வல்வை நலன்புரி சங்கத்தினரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவையும் பயனுள்ள செயல்பாடுகளும் வாழ்த்துக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.