நேற்று பிற்பகல் ஆரம்பமான வல்வை விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டுப் போட்டி, ஓரிரு போட்டிகள் இருக்கும் தருவாயில் இடை நிறுத்தப்பட்டிருந்தன. வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான செல்வன் சிவநாதன் நிமலன் நேற்று மாலை மரணமானதைத் தொடர்ந்து இறுதி போட்டிகள் மற்றும் பரிசளிப்பு வைபவம் என்பன இடைநிறுத்தப்பட்டன.
கீழே படத்தில் கடந்த வருடம் மே மாதம் 15 ஆம் திகதி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் புத்தூர் எவரஸ்ற் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது.
வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி கொண்ட இப்போட்டியில் பங்கு கொண்ட செல்வன் நிமலன் பின்னால் இடமிருந்த வலமாக முதலாவதாக வுள்ளார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.