சிவன் கோயில் வீதிகளில் இடம்பெறும் திருத்தொண்டுப் பணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2018 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தை ட்டி, கோயிலின் வெளிவளாக வீதிகளில் திருத்தொண்டுப் பணிகளில் ஆலயத் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிவளாக வீதிகளில், குறிப்பாக கற்கள் நிறைந்துள்ள தெற்கு வீதியில் கற்கள் உடைத்து அகற்றப்பட்டு, மண் இடப்பட்டு வீதி சமப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகி வருடாந்த தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள உற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 30 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா மறுநாள் 31 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது
கீழே படங்களில் ஆலயத்தின் தெற்கு வீதியில் இடம்பெற்று வரும் திருத்தொண்டின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.