வல்வை சிவன் கோவில் 13ஆம் நாள் இரவுத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2017 (சனிக்கிழமை)
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர வருடாந்த உற்சவத்தின் 13ஆம் நாள் இரவுத்திருவிழாவானது மாலை கொடித்தம்ப பூஜை இடம்பெற்று அத்திரதேவர் வெளிவீதி வலம்வந்து பின்னர் மாலை 6.30 அளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமானது.
பின் சுவாமி கைலாச வாகனத்திலும், பிள்ளையார் எலி வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வெளிவீதியுலா வந்தனர். திருவிழா அர்த்தயாம பூஜையுடன் நிறைவெய்தியது.
நாளை காலை கிருஷ்ணகந்தோற்சவமும், மாலை 05.30 மணிக்கு பிட்சாடனமூர்த்தி நெடியகாடு வரையிற் சென்று பிட்சையேற்கப் போதல் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
13 ஆம் இரவுத் திருவிழாவின் காட்சிகளைக் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.