வல்வை ஒன்றியம் டென்மார்க் கோடைகால விழா இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2016 (புதன்கிழமை)
வல்வை ஒன்றியம் டென்மார்க் நடத்தும் கோடைகால விழா எதிர்வரும் சனிக்கிழமையன்று 11.06.2016 பகல் 11.00 மணியளவில் கேர்னிங் நகரத்தில் உள்ள லூவபாக்கனில் ஆரம்பமாகிறது.
விளையாட்டு நிகழ்வுகள், மதிய உணவு, மாலை உணவு என்று பல்வேறு விடயங்கள் இடம்பெறவுள்ளன.
ஊரும் உறவும் புலம் பெயர்தலால் தொலைந்து போகாதிருக்க இது ஓர் நிகழ்வு..
ஏன் இங்கு வந்தோம்..
இதுவரை என்ன ஆனானோம்..
இனி எங்கே போகப்போகிறோம்...
நமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன..
நமது ஊரவர்களைக் கூட இழந்து புலம் பெயர் வெளியில் கரைந்து மறையப் போகிறோமா..
கேள்விகள் பல உள்ளன..
பதில் போல அமைகின்றது இது போன்ற ஒன்றுகூடல்கள்..
ஊருக்கு ஒரு கை உணர்வோடு மற்றெல்லாம் தாயகத்திற்கு என்ற இவர்கள் தலைமை வாசகம் மின்னுகிறது..
வல்வை ஒன்றியம் டென்மார்க் தற்போது வருடத்தில் இரண்டு தடவைகள் ஒன்றுகூடலை நடத்தி வருகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.