சிதம்பராக் கல்லூரி மாணவி தசாந்தினி இராமகிருஷ்ணன் பழுதூக்கும் போட்டியில் தேசிய மட்ட ரீதியில்
தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2014 (வியாழக்கிழமை)
கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற தேசியமட்ட ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான பழுதூக்கும் போட்டியில் யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரி மாணவி தசாந்தினி இராமகிருஷ்ணன் 3 ஆம் இடத்தைபெற்று சாதனைபடைத்துள்ளார்
ஏற்கனவே வடமாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 17 மற்றும் 19 வயது பெண்களுக்கான பழுதூக்கும் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பழுதூக்கும் போட்டியில் செல்வி யோகேஸ்வரி கோகுலதாஸ் 2 ஆவது இடத்தையும், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பழுதூக்கும் போட்டியில் செல்வி தசாந்தினி இராமகிருஷ்ணன் 3 ஆவது இடத்தையும் பெற்றே தேசியமட்டத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.