நெதர்லாந்தின் அன்ற்வேப் துறைமுகத்தின் Scheldt River இல் பயணித்துக்கொண்டிருந்த 366.05 மீட்டர் நீளமுடைய மிகப் பாரிய கொள்கலன் கப்பலான CSCL Jupiter, ஒரு வளைவில் திரும்ப மறுத்ததால் தரை தட்டியது. இந்தச் சம்பவம் கடந்த 14 ஆம் திகதி காலை 7 மணிக்கு, குறித்த கப்பல் Antwerp துறைமுகத்திலிருந்து ஜெர்மனியின் Hamburg துறைமுகத்திற்கு செல்லும் போதே இடம்பெற்றது.
மணிக்கு 13 கடல் மைல்கள் வேகத்தில் பைலட்டின் உதவியுடன் சென்று கொண்டிருக்கையில், வளைவு ஒன்றில், திரும்புவதற்கான கட்டளை பிறப்பித்திருந்த போதும், கப்பலின் 'Steering system' தொழிற்பட மறுத்ததால் கப்பல் முன்பாகம் மணற்பாங்கான பகுதியிலும் பிற்பாகம் சேறு பாங்கான பகுதியிலும் தரை தட்டி நின்றன.
சம்பவத்தைத் தொடர்ந்து சுமார் 24 மணி நேரத்தின் பின்னர் உயர் நீரோட்டத்தின் (High tide), 16 மீட்புக் கப்பல்கள் (Salvage tugs) உதவியுடன் மீண்டும் ஆழமான பகுதிக்கு மிகுந்த பொருட்ச் செலவில் இழுக்கபட்டது. தற்பொழுது கப்பல் மீண்டும் அன்ட்வேர்ப் துறைமுகத்தில் விசாரணை மற்றும் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாரிய கப்பல்கள் உருவாக்கத்திற்கு ஏற்றவாறு மீட்புப் பணிக்கான வசதிகள் உலகின் பல பாகங்ககளிலும் உள்ள துறை முகங்களில் இன்னும் வளர வில்லை என்பதை கூறி நிற்கின்றது இந்தச் சம்பவம்
Below is its AIS track and data during the grounding provided by MarineTraffic.com
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.