பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக விவகாரம் தொடர்பில் இன்று பருத்தித்துறை கொட்டடி மீனவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் பேச்சு நடத்தினர்.
பருத்துறை துறைமுகத்தை அகலித்து அபிவிருத்தி செய்ய கொழும்பு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. தற்போதைய படகு நிறுத்தும் இடத்தை துறைமுக அகலிப்புக்குள் உள்வாங்கப்படுவதற்கு அந்தப் பகுதி மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதனால் அபிவிருத்தித் திட்டம் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கொட்டடி மீனவர்களுடன் கலந்துரையாடினார். கொட்டடி மீனவர் சங்கக் கட்டடத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
மீனவர்கள் தமது தரப்பில் பல கருத்துக்களைத் தெரிவித்தனர். பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் தற்போது பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர் கலாசாரத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தற்போது இந்த நிலை எனில் துறைமுக அகலிப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்த பின்னர் நிலை இன்னும் மோசமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அந்தப் பகுதியை பௌத்த மயமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன என்றும் குற்றஞ்சாட்டினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.