கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை (Presidents's House) மற்றும் கோல்டன் பூங்கா (Golden Park) ஆகியவற்றினை பொதுமக்கள்பா கடந்த 8 ஆம் திகதியிலிருந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஏராளமான மக்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டுவருகின்றனர்.
29 ஆளுநர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள் தமது உத்தியோகபூர்வ பணிகளுக்காகவும் வாசஸ்தலமாகவும் உபயோகப்படுத்திக் கொண்ட உத்தியோகபூர்வ இல்லமாகிய கோட்டை ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் பார்வைக்காக வரலாற்றில் முதற் தடவையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை பொதுமக்கள் உட்செல்ல முடியாதவாறு மூடி வைக்கப்பட்டிருந்த அரச மாளிகையின் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக விளங்கிவந்திருந்தது.
கடந்த 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை பிற்பகல் 2.00 முதல் 7.00 மணி வரை ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்று முற்பகலிலும்
மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.