தொண்டைமனாறு கெருடாவில் வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று நண்பகல் கோயில் வளாகத்தில் நடைபெற்று கொடியிறக்கும் விழா மாலை 4 மணியளவில் நிறைவெய்தியது. இதனைத் தொடர்ந்து அம்பாள் வீதியுலா இடம்பெற்றது.
வீதியுலாவின் போது அம்பாள் முதலில் தொண்டைமனாறு பிள்ளையார் கோயில் சென்று, அங்கிருந்து வல்லை வீதிவழி செல்வச்சந்நிதி சென்றடைந்து அங்கிருந்து ஆற்றங்கரை வழியாக தொண்டைமனாறு சந்தி - நடுத்தெரு - பெரிய கடற்கரை - சின்னக் கடற்கரை வழியாக இன்று அதிகாலை 0130 மணியளவில் தன் கோயில் வந்தடைந்தார்.
இந்த விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் பிரதான வீதி மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் தொண்டைமனாறு பெரிய கடற்கரையில் ராகம்ஸ் இசைக் குழுவின் இசைக் கச்சேரியும் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.