பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை 05.00 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, பகதர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் மாலை 06.10 மணியளவில் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று, திருவிழா நிகழ்வுகள் காலை 08.00 மணி வரை நீடித்திருந்தது. கொடியேற்ற நிகழ்வை தரிசிக்க ஏராளமான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்
வழமைக்கு மாறாக செல்வசந்நிதி முருகன் கோயிலில் முதல் 5 தினங்கள் சுவாமி வீதியுலா மாலை வேளைகளில் மட்டுமே இடம்பெறும்.
வருடாந்த மகோற்சவத்தினையொட்டி பிரதான வீதிகள் இரண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்நிதி கோயிலில் தொண்டுகளில் ஈடுபடும் பூத்தொண்டர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்வு நேற்றும் இன்றும் இடம்பெற்றது.
15 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் தேர்த் திருவிழா 05 ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா 06 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.